தர்மபுரி: அரூரில் 8. 75 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

65பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று மார்ச் 21 மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். 

இந்த மஞ்சள் ஏலத்தில் 30 விவசாயிகள் 150-க்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 11, 021 முதல் ரூ. 13, 091 வரை ஏலம் போனது. அதேபோல் குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10, 371 முதல் ரூ. 12, 371 வரை யிலும் விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ. 8. 75 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி