தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமான தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையம், மொரப்பூர் ஏற்பாடு செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கான பணி சார்ந்த புத்தாக்க பயிற்சி மற்றும் ஆளுமை திறன் பயிற்சி நேற்று மாலை அளிக்கப்பட்டது. பயிற்சியினை தர்மபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது மேலும் தர்மபுரி சரக துணை பதிவாளர் விஷ்ணுபிரியா, தர்மபுரி பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சுந்தரம், தர்மபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை, பண்டகசாலையின் துணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் கோப்பெருந்தேவி, துணைப் பதிவாளர் பணியாளர் அலுவலர் பாலசுப்பிரமணியன் அவர்களும் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் மேலாண்மை இயக்குனர் ஜனார்த்தனன் அவர்களும், தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ராஜப்பன் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கினர். இப்பயிற்சியில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பொது விநியோக திட்ட பணியாளர்கள் சுமார் 450 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.