தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு தினசரி நடைபெறும் பட்டுக்கூடு ஏலத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். உற்பத்தி அதிகரித்ததால் நேற்று முன் தினம் அங்காடிக்கு 1, 729 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள். நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த வெண்பட்டுக் கூடுகள் 2, 713 கிலோவாக அதிகரித்தது. மேலும் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ. 612-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 380-க்கும், சராசரியாக ரூ. 547. 73-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 14 லட்சத்து 97 ஆயிரத்து 403-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.