தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெற்று வருவது வழக்கம்.
மேலும் இரு மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் சந்தை நடைபெறுவதால் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். மேலும் நேற்று மார்ச் 14 நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தின் அடிப்படையில் சிறிய அளவிலானவை 5200 முதல் பெரிய அளவிலானவை 9000 ரூபாய் வரை விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் 27 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.