தர்மபுரி: புளுதியூர் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோர்

54பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் புதன்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரசந்தை நடக்கிறது. தர்மபுரி மாவட்ட எல்லையோரம் நடைபெறும் இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி திருப்பத்தூர் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்து செல்வது வழக்கம். நேற்று ஜூன் 04 நடைபெற்ற சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மாடுகள் ரூ. 6, 700 முதல் ரூ. 47, 000 வரையும் ஆடுகள் ரூ. 4000 முதல் 12, 500 ரூபாய் வரை மொத்தம் 57 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாகவும், பக்ரீத் பண்டிகை முன்னிட்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி