தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பேருந்து நிறுத்த வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நாட்டுக்கோழிகள் விற்பனைக்காகவே மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெற்று வருகிறது இந்த வார சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்க மற்றும் வாங்க வந்து செல்வது வழக்கம் மார்ச் 23 நேற்று நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்த நிலையில் நாட்டுக்கோழிகள் தரம் மற்றும் அளவைப் பொறுத்து 350 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரையில் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சம் ரூபாய்க்கு நாட்டுக்கோழிகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.