தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சோதனையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததை எதிர்த்து தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக மாநில நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது ஆனதை கண்டித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜக கட்சி நிர்வாகிகள் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்ததை கண்டித்து அவரை விடுதலை செய்ய கோரி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மார்க் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பாஜகவினரை கடத்தூர் காவலர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.