தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏளனம் செய்யும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வெற்றிலை வாரச் சந்தைக்கு வெற்றிலைகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர்.
கடந்த வாரம் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 4,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் நேற்று சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 2,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையானது. விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் நேற்று 1.50 இலட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.