தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியில், வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில், வெற்றிலை சந்தை நடப்பது வழக்கம். நேற்று டிசம்பர் 22 நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் திருவண்ணாமலை வேலூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வெற்றிலை களை விற்க மற்றும் வாங்க
வந்திருந்தனர். 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலையின் ஆரம்ப விலை 10000 ரூபாய்க்கு துவங்கி அதிகபட்சம் 18, 000 ரூபாய் வரையில் விற்பனையானது.
கடந்த வாரத்தைக் காட்டிலும் மூட்டைக்கு 2000 விலை குறைந்தது. நேற்று 24 மூட்டை வெற்றிலை 4. 32 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.