பாலக்கோடு: மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டி தீர்க்கும் கனமழை

68பார்த்தது
தமிழகம் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக கனமழை பொழிந்து வருகிறது.

அக்டோபர் 11 நேற்று காலை முதல் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கனமழை பொழிந்து வரும் நிலையில் அக்டோபர் 12 இன்று காலை வரை பாலக்கோடு, ஒகேனக்கல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி