காரிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக் குநர் புவனேஸ்வரி விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள். பூ எடுக்கும் சமயத்தில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஒரு ஹெக்டே ருக்கு 400 கிலோ ஜிப்சம் இடவேண்டும். முக்கியமாக கால்சியம் மற்றும் கந்தக குறைப்பாடு உள்ள நிலங்களில் ஜிப்சம் இடுதல் நல்ல பலனை தரும். பூக்கள் எண்ணிக்கை அதிகமாகும். விழுதுகள் ஆழமாக மண்ணில் இறங்கவும் மற்றும் காய் அம்புகள்
அதிகரிக்கவும் உதவி புரியும். எண்ணெய் சத்து அதிகரிக்கும். பொக்கு கடலைகள் உருவாகுவதை தடுக்கும். நிலக்கடலையில் உண்டாகும் சொறி போன்ற பாதிப் புக்களை குறைக்க உதவும். மகசூல் அதிகரிக்கும். விவசாயிகள் டி. என். ஏ. யு நிலக்கடலை ரிச் எனும் நுண்ணூட்ட கலவை மற் றும் வளர்ச்சி ஊக்கி கலந்த பூஸ்டரை பயன்படுத்தி நிலக்கடலையில் அதிக மகசூல் பெறலாம்.
நிலக்கடலை ரிச் பூஸ் டரை பூக்கும் பருவத்தில் 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீர் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து இலை வழியாக தெளிப்பதன் மூலம் பூ உதிர்தலை தடுக்கலாம்.
இதன் மூலம் 15 சதவீதம் வரை அதிக மகசூல் பெற லாம். மேலும், வறட்சியை தாங்கி வளரவும் வழிவகை செய்கிறது. விவசாயிகள் மேற்கூறிய தொழில்நுட் பத்தை கடைபிடித்து, நிலக் கடலையில் அதிக மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்