தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதனை நிகழ்வில் ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து 31 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 96 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 96 மனுக்கள் மீதும் விசாரணைகள் நடத்தி முடித்து வைக்கப்பட்டது மேலும் புதிதாக 33 மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.