தர்மபுரி: பாலக்கோடு பேரூராட்சியில் 500 மரக்கன்றுகள் நடவு

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணா நகர் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று 500 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைப்பெற்றது இந்த நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பிகே. முரளி தலைமையில் நடைபெற்றது பாலக்கோடு அண்ணா நகர் ரயில்வே கேட் முதல் இந்திரா காலனி ரேஷன்கடை வரையில் தக்காளி மண்டி நெடுஞ்சாலை வரையிலும் சுமார் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது தொடர்ந்து பூமியையும் இயற்கை சூழலையும் பாதுகாக்க வேண்டும், எந்த விதத்திலும் இயற்கையை மாசு படுத்த மாட்டேன் எனவும் நெகிழி பகுதிகளை பயன்படுத்த மாட்டேன் எனவும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் இதில் பேரூராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி