தர்மபுரி: அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

65பார்த்தது
தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான புற மற்றும் உள் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தாய் சேய் நலகுழந்தைகள் பிரிவில் பிரசவத்திற்கான அனுமதிக்கபட்டிருந்த பாளையம்புதூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி கோதாவரி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சின்னசாமி குழந்தையை பார்க்க காவலாளிகளுக்கு தினமும் பணம் கொடுத்து விட்டு தான் தனது குழந்தையை பார்த்துள்ளார். நேற்று சின்னசாமியின் மனைவி கோதாவரியை வீட்டு போகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது சின்னசாமி மருத்துவமனைக்குள் இருந்த மனைவி மற்றும் உடமைகளை எடுக்க சென்றுள்ளார். அப்போது காவலாளிகள் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து இன்று நேரில் சென்ற தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிரசவத்திற்காக அனுமதித்து அவரது கணவரை தாக்கிய காவலர்கள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் நோயாளிகளிம் சிகிச்சை குறித்தும், மருத்துவமனையில் வழங்கும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தாக்குதல் நடத்திய காவலாளிகளை பணிநீக்கம் செய்ய உள்ளிருப்பு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி