தர்மபுரி: வார சந்தையில் 1. 30 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

74பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் 700 ஆடுகள், 500 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. இதில் 75 லட்சத்திற்கு ஆடுகளும் 51 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி விற்பனை ரூ 4 லட்சம் அளவில் இருந்தது. மொத்த கால்நடை விற்பனை ரூ 1. 30 கோடி அளவில் இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று நடைபெற்ற சந்தையில் கால்நடை வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி