தர்மபுரி: யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு

62பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எருதுகூடஅள்ளி, கணவனஅள்ளி பகுதிகளில் காப்புக்காடு அமைந்துள்ளது அங்கு கடந்த சில நாட்களாக மூன்று காட்டு யானைகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது இது குறித்து தகவல் அறிந்து பாலக்கோடு வனத்துறையினர் வனச்சரக அலுவலர் நடராஜ் தலைமையில் நேற்று முதல் எருதுகூட அள்ளி பகுதியில் யானை நடமாட்டங்களை கண்காணித்தனர். அங்கு மூன்று காட்டு யானைகள் அப்பகுதிகள் விவசாய நிலங்களில் சுற்றித் தெரிந்தனர் இதனை கண்டு வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காப்பு காட்டில் துரத்தி விட்டனர் மேலும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுக்குள் விரட்டப்பட்ட யானைகள் காப்பு காட்டின் அருகாமையில் உள்ள கிராமங்களில் செங்கோடபட்டி, கணவனஅள்ளி,  உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் வர வாய்ப்புள்ளதால் இன்று காலை செங்கோடபட்டியில் வனத்துறை சார்பாக இரவு நேரங்களில் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யானை நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி