தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையில் தர்மபுரி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றியவர் குமணன். இவர் சுகாதாரத்துறையில் 8 ஆண்டுகள் பணியாற்றினார். இதையடுத்து பதவி உயர்வில் உணவு பாதுகாப்புத்துறையில் உணவு பாதுகாப்பு அலுவலராக கிருஷ்ணரியிலும் தர்மபுரியிலும் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றினார். தற்போது தர்மபுரி வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி குமணன் ஓய்வு பெற்றதையடுத்து அவருக்கு பாராட்டு விழா நேற்று மாலை நடந்தது.
இந்த விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்று பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுஜாதா தலைமை வகித்து பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், நண்பர்கள், குழு சார்பில் மத்திய வங்கி அலுவலர் ரவி மற்றும் நண்பர்கள் இணைந்து குமணன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மாலை அணிவித்து கொண்டாடை போர்த்தி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர் அது தொடர்ந்து உறவினர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இறுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.