தர்மபுரி: மரமில்லில் தீ விபத்து 1 கோடி ரூபாய் பொருட்கள் சேதம்

66பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தை அருகே நடராஜன் என்பவருக்கு அரவை மில் உள்ளது. அதன் அருகாமையில் சபீர் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மெத்தை குடோன் உள்ளது. இந்த இரண்டு தொழிற்சாலைகளும் அருகருகே செயல்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தொழிற்சாலைகளை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று மார்ச் 29 விடியற்காலையில் மரம் மில்லிருந்து கரும்புகை வெளியேறியது. 

சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்து மளமளவென பரவி இரண்டு தொழிற்சாலைகளிலும் பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவலர்களும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற கடைகளுக்கு தீ பராமல் தடுக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறை வீரர்கள் இந்த விபத்தில் மரம் அறுக்கும் மில்லில் இருந்து இயந்திரங்கள், தேக்கு மரங்கள், சோபா தயாரிக்க பயன்படும் பஞ்சு உள்ளிட்ட பொருட்கள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி