தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி அருகே உள்ள உப்பாரஅள்ளி சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தனக்கோடி, கட்டிட தொழிலாளி இவரது மனைவி தில்லைச்செல்வி இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தில்லைச்செல்வி, கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனக்கோடி நேற்று விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனக்கோடி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரண்டஅள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.