தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மஞ்சுளா சரவணனும், துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த ராசாத்தி வடிவேலும் இருந்து வருகின்றனர். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி ராசாத்தியை மீட்டனர்
அப்போது பேசிய ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராசாத்தி ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடுகளு க்கு ஒத்து வராத காரணத்தினால் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து தன்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். என்னிடம் விசாரணை எதுவும் செய்யாமலே விளக்கம் கேட்காமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது. தன்னை தகுதிநீக்கம் செய்துவிட்டு வேறொருவரை நியமித்தது ஊராட்சியில் நிலுவையில் உள்ள 20 லட்சம் கையாடல் செய்துள்ளனர். ஊராட்சி பதவிக்கால முடிய இன்னும் 15 நாட்களில் இருக்கும் நிலையில் ரூ. 20 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதனை கண்டித்தும் முழுமையாக நீதி விசாரணை வேண்டுமென வலியுறுத்தி நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என தெரிவித்தார்.