சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து அதிமுக சார்பாக மாணவியின் பாலியல் வன்கொடுமையை கண்டிக்கும் வகையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் தருமபுரி தொலைதொடர்பு அலுவலகம் எதிரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அரூர், சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், தருமபுரி ஒன்றிய கழக செயலாளர் நிலாபுரம் செல்வம், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் அமைச்சர் உட்பட அனைத்து அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.