பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே. பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொதுச் செயலாளர், மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின் படி, பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய; சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய திமுக ஸ்டாலின் ஆட்சியைக் கண்டித்து தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும், தர்மபுரி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. பி. அன்பழகன் தலைமையில் நாளை (டிசம்பர் 27) காலை 10.30 மணிக்கு தருமபுரி BSNL அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அதுசமயம் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என இன்று டிசம்பர் 26, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.