பேச்சு போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

490பார்த்தது
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி. சாந்தி, இஆப, அவர்கள் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பிற்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பேச்சுப்போட்டி முறையே 10. 10. 2023, 12. 10. 2023, 13. 10. 2023 ஆகிய நாள்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முற்பகல் 09. 30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5000/-, இரண்டாம் பரிசாக ரூ. 3000/-, மூன்றாம் பரிசாக ரூ. 2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அனுப்பியுள்ள படிவத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம். மாணவ/மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி. சாந்தி இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி