தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று காலை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுதாஸ் தலைமையில் பொதுமக்கள் குறை திருமுகம் நடைபெற்றது இத நிகழ்ச்சிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார் இந்த முகாமில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 33 காவல் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரடி வரவழைக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் பல்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி 74 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 74 மனுக்களுக்கும் நேற்றைய தினமே உடனடியாக தீர்வு காணப்பட்டது மேலும் ஆறு மனுக்கள் மீது மேல்விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் சிவராமன் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன் பார்த்திபன் புஷ்பராணி உதவி காவல் ஆய்வாளர்கள் குப்புசாமி செல்வராஜ் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.