வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

59பார்த்தது
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மாரப்பக வுண்டர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர். இவரது மனைவி திலகவதி. இவர் மாட்லாம்பட்டி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று, மாரிமுத்து சொந்த வேலையாக வெளியூர் சென்றிருந்தார். அவரது மனைவி, வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார். நேற்று மாலை அந்த வழியே சென்றவர்கள், வீடு திறந்து கிடப்பதாக திலகவதிக்கு தக வல் தெரிவித்தனர்.

உடனடியாக பள்ளியில் இருந்து திலகவதி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 1. 75 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது. இதுகுறித்து மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி