அரூர் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (55), ஐஸ்கிரீம் வியாபாரி. இவர் நேற்று, தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, இவரது டுவீலரை காணவில்லை. இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது வேப்பநத்தம் எல்லை யில் ஒருவர், மூர்த்தியின் டூவீலரை ஓட்டி சென்றார். அவரை மடக்கி பிடித்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (36) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த டுவீலரை பறிமுதல் செய்தனர்