உளிகற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

63பார்த்தது
உளிகற்கள் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட நூல அள்ளி கிராம நிர்வாக அலுவலர், நூல அள்ளியில் இருந்து நாயக்கன்பட்டி செல்லும் சாலையில் இன்று செப்டம்பர் 28 காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி சட்டவிரோதமாக உளி கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், லாரியை பறிமுதல் செய்து, அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அழகு என்பவரை பிடித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி