அரூர் அருகேகௌப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலன் (வயது 52). விவசாயி. இவர் நேற்று வீட்டின் சுற்றுச்சுவர் பகுதியில் தனது செல்போனை வைத்துவிட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த வல்லரசு வயது 21 என்பவர் வேலனின் செல்போனை திருடி கொண்டு ஓடிவிட்டார். இதுதொடர்பாக வேலன் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வல்லரசை கைது செய்தனர்.