தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
சித்தேரி பஞ்சாயத்தில் 62 குக்கிராமங்கள் உள்ளன.
இந்த சித்தேரி கிராமத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் பேருந்து ஏறும் இடத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் வேலைக்கு செல்லும் ஆண்கள் வேலைக்கு செல்லாமல் மதுபாட்டில்களை வாங்கி சென்று குடித்து விட்டு மேலும் குடிக்க பணம் கேட்டு வீட்டில் உள்ள பெண்களை துன்புறுத்தி வருவதாகவும்
மது வாங்க வரும் வாலிபர்கள் மதுவை அருந்திவிட்டு வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் உயிரிழப்பும் ஏற்படுவதாகவும், ஆகையால் தங்கள் பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி சித்தேரி குண்டல்மடுவு நொச்சிக்குட்டை தோல்தூக்கி மண்ணூர் சூர்யக்கடை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோர் மதுபானக்கடையின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அரூர் டிஎஸ்பி ஜெகநாதன், அரூர் ஆர்டிஓ வில்சன் ராஜசேகர்,
ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.