தர்மபுரி: நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

64பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெறுகிறது. நேற்று மார்ச் 18 கூடிய சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் வரத்து குறைந்த நிலையில் விலை அதிகரித்துள்ளது. ஆடுகளின் அளவை பொறுத்து 3,000 ரூபாய்க்கு துவங்கி 20,000 ரூபாய் வரை என 35 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி