தர்மபுரி 4 ரோடு அருகே அரசு பட்டு கூடு அங்காடி அரசு ஆவின் வளாகம் உழவர் சந்தை போன்ற பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் அடைப்பை ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர் தினம்தோறும் காலையில் உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வருகின்றனர் அப்போது உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் கழிவு நீர் கால்வாய் தேங்கி இருப்பதால் உழவர் சந்தை செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் காலையில் ஆவின் நிலையத்தில் பால் வாங்க செல்லும்போது கழிவுநீர் கல்வாய் தாண்டி தான் செல்ல வேண்டும் அங்கு துர்நாற்றம் வீசுகிறது இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சிக்கு நிர்வாகத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உழவர் சந்தை மற்றும் ஆவின் பால் நிர்வாகிகள் தெரிவித்தனர். நகராட்சி அலுவலரிடம் இதைப் பற்றி கேட்கும் போது எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. இப்பகுதியில் உடனே கழிவு நீர் கால்வாய் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.