தர்மபுரி: காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைத்தீர் முகாம்

83பார்த்தது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று 04. 06. 2025 ஆம் தேதி காலை 10. 00 மணி முதல் 2. 00 மணி வரை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. S. மகேஸ்வரன், B. com. BL. , தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் 33 காவல் நிலையங்களில் இருந்தும் புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) N. பாலசுப்பிரமணியன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு K. ஸ்ரீதரன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப்பட்ட 76 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 76 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று புதிதாக 38 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி