தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் மாம்பட்டி, தீர்த்தமலை, அம்மாபேட்டை, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, சிட்லிங், கோட்டப்பட்டி, பெரிய பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் அழகுமணி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்கோடு சர்க்கரை ஆலை, கடமடை, கொள்ளலஅள்ளி, எண்டப்பட்டி, புளிக்கரை, தப்பை, மோட்டூர், பஞ்சப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் இருக்கும் என செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.