தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகளை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக மூன்று காட்டு யானைகள் நடமாடி வருகின்றது இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வன சரக அலுவலர் நடராஜன் தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை வனப் பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மாலை எருதுகூடப்பட்டி வனப்பகுதியில் 3 காட்டு யானைகள் வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளன இதனை அடுத்து நேற்று இரவு முழுவதும் வனத்துறையினர் காப்புக்காடு ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் மேலும் இன்று மே 10 காலை எருதுகூடப்பட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இரவு நேரங்களில் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் எனவும், யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தாலோ அல்லது விவசாய நிலையங்களுக்குள் புகுந்தாலோ உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.