தர்மபுரி: கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி

71பார்த்தது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தின்னஅள்ளி ஊராட்சி எட்டியானூர் கிராமத்தில் புள்ள முனியப்பன் கோவில் அமைந்துள்ளது இங்கு கோவில் பூசாரியாக சின்னசாமி என்பவர் உள்ளார். வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு மார்ச் 15 நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ளே இருந்த உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருட முயற்சி நடந்து இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சின்னசாமி நேற்று அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சின்னசாமி அளித்த புகாரின் அடிப்படையில் அதியமான் கோட்டை காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி