ஆடு, மாடு, கோழிகள் ரூ. 42 லட்சத்திற்கு விற்பனை

75பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. மிகவும் பழமை மற்றும் பிரசித்தி பெற்ற இந்த வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கால்நடைகள் விற்க மற்றும் வாங்குவதற்காக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்று(ஆக.28) நடைபெற்ற வாரச் சந்தையில் நாட்டு மாடுகள் மற்றும் ஜெசி கலப்பின பசுக்கள் ரகம் மற்றும் தரத்தைப் பொறுத்து 6000 ரூபாய் முதல் 46 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலும், ஆடுகள் 5500 முதல் 9800 ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழிகள் 300 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரையிலும் என நேற்று ஒரே நாளில் ரூ. 42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி