அரூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா விழிப்புணர்வு பேரணி நேற்று அரூரில் நடந்தது. பேரணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேரணியை அரூர் தாசில்தார் பெருமாள் துவக்கி வைத்தார். பேரணியானது நெடுஞ்சாலை அலுவலகத்தில் தொடங்கி பஸ் நிலையம், கடை வீதி, பாட்ஷாபேட்டை, பைபாஸ் சாலை, ரவுண்டானாவில்வழியாக வந்தது. நெடுஞ்சாலை உதவிப் பொறியாளர் கணபதி, மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் விஜயகுமார்,
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வைகுண்டவாசகம், எஸ்ஐ தர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.