தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இன்று மார்ச் 21, அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வே. சம்பத்குமார் கேள்வி நேரத்தில் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்றப்பட்டி பேரூராட்சியில் 220 கே வி துணை மின் நிலையம் அமைத்தால் அரூர் சுற்றியுள்ள மாம்பட்டி, அரூர், மொரப்பூர், இராமியம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, உள்ளிட்ட ஐந்து 110 கேவி துணை மின் நிலையங்களில் உள்ளன சீரான மின்சாரம் வழங்க முடிவதில்லை அப்போது குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் செட்றப்பட்டி பகுதியில் புதியதாக 220 கே வி துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.