தொழிற்பயிற்சி நிறுவனங்களின் சேர கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர்

1898பார்த்தது
தர்மபுரி மாவட்ட ங சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள‌ பாடப்பிரிவுகளில் நடப்பு 2024-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 14 வயது முதல் 40 வயது வரை ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. இந்த தொழில் பிரிவு படிப்புகளில் சேர விரும்புகிறவர்கள் www. skilltraining. tn. gov. in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கை தொடர்பான மற்ற விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது உரிய ஆவணங்களுடன் விண்ணப்ப கட்டணமாக ரூ. 50 மட்டும் ஆன்லைன் மூலம் செலுத்தவேண்டும்.

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான கால அவகாசம் வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதி உள்ள மாணவ, மாணவிகள் தர்மபுரி மற்றும் அரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி