தர்மபுரி சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமான ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது இந்த நிலையில் இன்று காலை கூடிய ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி , பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம் போன்ற பகுதியில் இருந்து 200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.