தர்மபுரி: முக்கிய சாலையில் பெண்கள் மனித சங்கிலி போராட்டம்

85பார்த்தது
தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 400க்கும் மேற்பட்ட பெண்கள் இலக்கியம்பட்டி யில் நேதாஜி பைபாஸ் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி கூறுகையில் இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியோடு இணைப்பது குறித்து கடந்த ஆட்சியிலேயே நாங்கள் கலந்து ஆலோசித்த போது வேண்டாம் என்று கூறியதால் எடப்பாடியார் அவர்கள் முடிவை கைவிட்டு விட்டார். இந்த ஊராட்சி தர்மபுரி நகராட்சியோடு இணைக்க இந்த அரசு திட்டமிட்டபோது அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதை எதையும் கருத்தில் கொள்ளாமல் இலக்கியம்பட்டி உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளை தர்மபுரி நகராட்சியோடு இணைத்துள்ளனர்.

இலக்கியம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்கள் ஏழை மக்கள். அவர்களால் நகராட்சியின் வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்த முடியாது. பெரும்பாலும் குடியிருக்க வீடு கூட இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர். அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் தொகுப்பு வீட்டை நாங்கள் பெற்றுத் தருவோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு இலக்கியம்பட்டி ஊராட்சியை தர்மபுரி நகராட்சியோடு இணைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் நாங்கள் எந்த அளவுக்கும் போராட தயாராக உள்ளோம் என்று பேட்டியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி