தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி அருகே உள்ள வெள்ளோலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல வாணி (17)
நேபாளத்தில் நடந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்ட கோகுல வாணி சர்வதேச அளவில் இரண்டாம் இடம் பெற்றார். தற்பொழுது சென்னையில் குயின் மேரிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தாய்லாந்து உலக குத்து சண்டை போட்டியில்(World champian ship)கிக் பாக்ஸிங் போட்டியில் 43 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு மூன்று சுற்றுகளில் விளையாடி இறுதியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சக வீராங்கனை உடன் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவின் கொடியை நிலைநாட்டி வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை தர்மபுரி பேருந்து நிலையத்தில் அவரது தாயும் உறவினர்களும் நண்பர்களும் வரவேற்று கேக் வெட்டி கொண்டாடினர் வெற்றியை மேலும் இது குறித்து தெரிவித்த கோகுல வாணி தொடர்ந்து வெற்றிகளை குறித்து வந்தாலும் போட்டிகளில் பங்கேற்பதற்கு பயண செலவிற்கு பற்றாக்குறையாக உள்ளது. அரசு சார்பிலும் தன்னார்வ அமைப்பினரோ தனக்கு நிதி உதவிகள் செய்தால் மேலும் நாட்டிற்காக பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பல நாடுகள் சர்வதேச அளவில் பங்கேற்று தேசத்திற்கு பெயர் வாங்கிக் கொடுப்பேன். இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.