தர்மபுரி: வானவேடிக்கையுடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்ற மக்கள்

78பார்த்தது
உலகம் முழுவதும் நேற்று டிசம்பர் 31 நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு கொண்டாட்டங்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 12 மணியளவில் தர்மபுரி பேருந்து நிலையம், நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் வானவேடிக்கையுடன் கூடிய பட்டாசுகளை வெடித்தும் கிழக்குகளை வெட்டியும் 2023 ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். மேலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி