தர்மபுரி: பாலக்கோடு சர்க்கரை ஆலையில் அமைச்சர் ஆய்வு

72பார்த்தது
தர்மபுரி: பாலக்கோடு சர்க்கரை ஆலையில் அமைச்சர் ஆய்வு
இன்று 09.05.2025 காலை 1.00 மணிக்கு பாலக்கோடு தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தலைமையில் சுற்றுலா, மற்றும் சர்க்கரை ஆலைத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயந்திர பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்து கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சர்க்கரை ஆலையின் உயர் அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி கருத்துகளை கேட்டறிந்து சிறப்புரை ஆற்றினார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ. மணி பி.கொம், பி.எல்., எம்.பி., முன்னிலை வகித்தார். 

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன், சர்க்கரை ஆலை இயக்குநர் தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலர் மற்றும் பாலக்கோடு மத்திய ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி பொறுப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், விவசாயிகள், கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி