தர்மபுரி: மகா மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா

70பார்த்தது
தர்மபுரி ஏமகுட்டியூர் கிராமத்தில் மகாமாரியம்மன், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், நவக்கிரம் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில் 48வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. இப்பூஜையொட்டி பால்குடம் எடுத்தல், திருவிளக்கு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து மண்டலபூஜை பூர்த்தி மகா யாக வேள்வி நடந்தது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை அம்மனுக்கும், அண்ணாமலையாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக துர்வசன் கர்வமங்கம் நாடகம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி