தர்மபுரி: சூறைக்காற்றுடன் பலத்த மழை, முறிந்து விழுந்த மரங்கள்

63பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பல்வேறு பகுதியில் தினசரி மாலை மற்றும் நிறுவனங்களில் கன மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் நேற்று (மே 9) இரவு நேரத்தில் காற்று வீசியது அதனைத் தொடர்ந்து நள்ளிரவு முதல் இன்று மே 10 விடியற்காலை வரை தர்மபுரி நகரப்பகுதி இலக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், நெசவாளர் காலனி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து இலக்கியம்பட்டி ஏரிக்கரை அருகே இருந்த பழமை வாய்ந்த மரம் காற்று வீசியதால் தர்மபுரி - சேலம் செல்லும் சாலையில் சரிந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மதுராபாய் சுந்தர்ராஜ் திருமண மண்டபம் அருகே கசகசா மரமும் சாலையோரம் சாய்ந்து விழுந்தது. நெடுஞ்சாலைதுறை ஊழியர்கள் அதிகாலை முதலே சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி