தர்மபுரி மாவட்டம் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைபேட்டை பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெளி மாவட்டங்களிலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்வது வழக்கம் இன்று ஜூன் 08 காலை கூடிய வார சந்தைக்கு கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் 260க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர் இன்று சிறிய அளவில நாடுகள் 2000 ரூபாய்க்கு துவங்கி பெரிய அளவில் வெள்ளாடுகள் 20 ஆயிரம் ரூபாயில் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் சுமார் 30 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.