தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் கடந்த வாரம் 25 லட்சம் மதிப்பிலான 52 பவுன் தங்க நகைகள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது இது குறித்து அவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தர்மபுரியின் நகர காவல் நிலைய ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் எஸ் விஜய சங்கர் தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், இந்த தனிப்படையினர் கொள்ளை கும்பலை நேற்று கைது செய்தனர். காரிமங்கலம் விஜய், ராகுல் (எ) ரஞ்சித், ரக்ஷன், தமிழ்ச்செல்வன் (எ) சந்துரு, மதி (எ) நர்மதாஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 46 பவுன் தங்க நகைகள் பறிமு தல் செய்யப்பட்டது. இதில், முக்கிய குற்றவாளியான விஜய் மீது, கடந்த 2023ம் ஆண்டு கோவையில் பிரபல நகைகடையில் கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.