தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ பணியாளர்கள் ஆர்பாட்டம்

68பார்த்தது
தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ பணியாளர்கள் ஆர்பாட்டம்
தருமபுரி:
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ பணியாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனி, நீதி, வீரப்பன், அழகுதுரை, துரை முன்னிலை வகித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம். மாதேஸ்வரன், விதொச மாநில. செயலாளர் ஜெ. பிரதாபன், ஏஐடியூசி மாநில. துணை செயலாளர் கே. மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் என். மனோகரன், ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஓட்டுனர்களை கொலை குற்றவாளியாக மாற்றும் பாரதிய நியாய சஞ்சிதா (TNS 106-2) சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். 10 வருடம் சிறை, ஏழு லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
நல வாரியத்தின் மூலமாக இஎஸ்ஐபிஃப், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஆன்லைன் அபராதத்தை உடனே வாபஸ் வாங்க வேண்டும். 60 வயது முடிந்த வாகன ஓட்டுனர் ஆட்டோ பணியாளருக்கு ரூ. 6000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்யும் உரிமைகளை பறிக்கும் ஓலா, உபர், ராபிடோவை தடை செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் ஆந்திரா, புதுச்சேரி அரசுகள் வழங்குவது போல் ரூபாய் 5000 போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி