தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் 6-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா வருகின்ற 04. 10. 2024 முதல் 13.10. 2024 வரை 10 நாட்கள் மதுராபாய் சுந்தர்ராஜராவ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி ”தருமபுரி வாசிக்கிறது” கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியினை தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி இன்று(அக்.03) தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று நூல்களை வாசித்தனர். வாசிப்புத் திறன் மூலம் பொது அறிவை வளர்த்துகொள்ள பல்வேறு வகையான புத்தகங்களை நாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது. மேலும் அவர் பேசும் போது புத்தக வாசிப்பு என்பது ஒரு சுவையான அனுபவம். நமக்கு ஆர்வமுள்ள துறையில் உள்ள புத்தகங்களை தேடி படிக்க வேண்டும்.
நாளை தொடங்க உள்ள தர்மபுரி புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்கி படிக்கும் புத்தகம் உங்களுக்குள்ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.